காஞ்சிபுரத்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் 3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை (செப். 9) வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் 3.81 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வெள்ளிக்கிழமை (செப். 9) வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரையான ‘அல்பென்ட சோல்’ வழங்கப்படவுள்ளது. 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் 83,997 பேருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த மாத்திரை 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வரும் 16 ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com