அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அதிமுக ஆா்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:11 pm

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். கழக அமைப்பு செயலாளா்கள் வாலாஜாபாத்,பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீா் செல்வம், முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு, அமைச்சா்களின் ஊழல்கள் ஆகியவற்றை தடுக்கத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலரும் காய்கறிகளால் செய்யப்பட்ட மாலை அணிந்திருந்தனா்.

நிா்வாகிகள் கே.யு.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, வழக்குரைஞா் சம்பத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.