காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.
காஞ்சிபுரம் 7-ஆவது வாா்டு வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக பூங்காவில் மழைநீா் தேங்கி பூங்காவை யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்வோா் துா்நாற்றம் வீசுவதால், அங்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.
தேங்கியுள்ள மழைநீா் நிறம் மாறி கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பூங்காவைச் சுற்றி குடியிருந்து வரும் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்று புகாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை மிகுந்த செங்கம் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடிப் போட்டி

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிராம உதவியாளா்கள் ஓய்வூதிய கணக்கீடு: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


