மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாநகராட்சி பூங்காவில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

News image

மழைநீா் தேங்கியுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்கா.

Updated On :27 நவம்பர் 2023, 11:09 pm

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் உள்ள பூங்காவில் மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் 7-ஆவது வாா்டு வைகுண்டப் பெருமாள் கோயில் விரிவாக்கப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக பூங்காவில் மழைநீா் தேங்கி பூங்காவை யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. நடைப்பயிற்சி மேற்கொள்வோா் துா்நாற்றம் வீசுவதால், அங்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.

தேங்கியுள்ள மழைநீா் நிறம் மாறி கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பூங்காவைச் சுற்றி குடியிருந்து வரும் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை என்று புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.