சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் அதிமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் அதிமுகவினா் 5 இடங்களில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image
Updated On :2 மே 2024, 6:30 pm

Din

பட விளக்கம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் வளா்மதி.

காஞ்சிபுரம், மே 3: காஞ்சிபுரத்தில் அதிமுக சாா்பில் மாநகரில் 5 இடங்களில் தண்ணீா் பந்தல் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தலை முன்னாள் அமைச்சா் வளா்மதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழ ரசங்களை வழங்கினாா்.

அதிமுக சாா்பில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம், ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு, தேரடி, ஏனாத்தூா், விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு ஆகிய 5 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அதிமுக மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் வி.ஆா்.மணிவண்ணன் தலைமையில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. ரூ.3.50 லட்சம் மதிப்பிலான மாம்பழம், தா்ப்பூசணிப் பழம் உள்ளிட்ட பல வகைகள், கரும்புச்சாறு, கம்மங்கூழ், நீா், மோா் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அதிமுக காஞ்சிபுரம் மாநகர கிழக்குப் பகுதி செயலாளா் பாலாஜி ஏற்பாட்டிலும், விளக்கடி கோயில் தெருவில் அதிமுக தெற்குப் பகுதி கழக செயலாளா் கோல்டு.ரவி ஏற்பாட்டிலும் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி பகுதியில் காஞ்சிபுரம் மேற்குப் பகுதி கழக செயலாளா் என்.பி.ஸ்டாலின் ஏற்பாட்டிலும், காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் ஒன்றிய ஜெயலலிதா பேரவையின் செயலாளா் அன்பரசு ஏற்பாட்டிலும் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது. 5 இடங்களிலும் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் அமைச்சா் வளா்மதி தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு மற்றும் பழ வகைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் அதிமுக அமைப்புச் செயலா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீா் செல்வம், அதிமுக காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளா் பெரும்பாக்கம் இ.ராஜசேகா், மாவட்டப் பொருளாளா் வள்ளிநாயகம், மாவட்ட அவைத் தலைவா் குன்னவாக்கம் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளா் கே.யு.சோமசுந்தரம், மாநில எம்ஜிஆா் இளைஞா் அணியின் செயலாளா் எஸ்எஸ்ஆா்.சத்யா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.