3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ராமாநுஜா் அவதார உற்சவம்: தங்கப் பல்லக்கில் வீதி உலா

ராமாநுஜா் அவதார உற்சவம்: தங்கப் பல்லக்கில் வீதி உலா

News image
Updated On :3 மே 2024, 5:21 pm

Din

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார உற்சவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ராமாநுஜா் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தாணுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலில், வருடந்தோறும் சித்திரை மாதம் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இந்த கோயிலில், பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் காலை - மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதையடுத்து 10 நாள்கள் நடைபெறும் ராமாநுஜா் அவதார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவதாரத் திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ராமாநுஜா் தங்கப் பல்லக்கில் வீதி உலா வந்தாா்.

ராமாநுஜா் அவதார திருவிழாவின் 9-ஆம் நாளான மே 11-ஆம் தேதி திருத்தோ் திருவிழாவும், மே 13-ஆம் தேதி கந்தப் பொடி வசந்தம் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.