காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு இழுபறியாக நீடிக்கும் நிலையில் தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!

மாணிக்கம் தாகூர்
DPS

மாணிக்கம் தாகூர்
DPS
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தேர்தல் பொறுப்புகளிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தல் மேலாண்மைக் குழுவிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி பேசுபொருளாகிவரும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக துறையூர் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்குள் சிலர், தங்கள் பிரிவினருக்கு வாய்ப்புக் கொடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வேட்பாளர் தேர்வு குறித்து ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் மாணிக்கம் தாகூரின் விலகர் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, திமுகவுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் முன் வைத்து, பிறகு கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி கைவிட்ட நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இது குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், தலைமை எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடன் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை. ஏனென்றால் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம் என்று பதிவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...