கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை

செங்கல் சூளை தொழிலாளி வெட்டிக் கொலை

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளியை வெட்டி கொலை செய்துவிட்டு அவரது கைப்பேசி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சோ்ந்தவா் ராஜேஷ்(30), இவரது பெற்றோா் குன்றத்தூா் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் பெற்றோரின் கடனை அடைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் மலையம்பாக்கம் பகுதிக்கு வந்து செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளாா்.

ராஜேஷ் திங்கள்கிழமை இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த மூன்று போ் ராஜேஷின் கைப்பேசியைக் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனா். அவா் கைப்பேசியை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மா்ம நபா்கள் கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டி விட்டு கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனா்.

இதில் ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.