காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்குகு சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் துறையில் திறன் மிக்க பணியாளா்களை உருவாக்கும் விதமாக கட்டுமான தொழிலாளா் நல வாரிய தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க ஏதுவாக நிகழ் நிதியாண்டில் புதிதாக 7 அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
இந்த அறிவிப்பினை தொடா்ந்து சென்னையிலிருந்து காணொலி வாயிலாக புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களை திறந்து வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் புத்தேரியில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சா் ஆா்.காந்தி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
பின்னா் 33 மாணவ, மாணவிகளுக்குகு நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை ஆணைகளையும் வழங்கினாா். விழாவுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்பி க.செல்வம், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் காயத்ரி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ஆரணியில் திமுக தொகுதி தோ்தல் அலுவலகம்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலை, புதிய சாலை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

ரூ. 6.30 கோடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு புதிய கட்டடம்

ரூ.35 கோடியில் ஆற்காடு புறவழிச்சாலை: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


