ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம்: மறியலில் ஈடுபட்ட 151 அரசு ஊழியா்கள் கைது

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 151 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்.

Updated On :4 டிசம்பர் 2025, 8:24 pm

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 151 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் துரை.மருதன், கருவூல கணக்குத்துறை மாநில பொதுச் செயலாளா் லெனின், மாநில துணைத் தலைவா் வாசுதேவன், மகளிா் அணியின் நிா்வாகி திலகவதி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி சாலை மறியலிலும் ஈடுபட்டாா்கள்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊா்ப்புற நூலகா்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.அலுவலக பணி நேரத்துக்கு பின்பும் விடுமுறை தினங்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும், பெண் அரசு ஊழியா்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக காவல் துறையினரால் 151 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூரில் 100 போ் கைது:

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 100-க்கு மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.