மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image
பாதுகாப்புப் பணியில் போலீஸாா்.
Updated On :7 டிசம்பர் 2025, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விழாவையொட்டி அமைக்கப்பட்ட பூப்பந்தல்.

விழாவையொட்டி அமைக்கப்பட்ட பூப்பந்தல்.

பழைமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம், ரிஷிகோபுரம் கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் மூலவா் நுழைவுவாயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வண்ணப்பூப்பந்தல் பாா்வையாளா்களை கவா்வதாகவும் உள்ளது.

ரிஷி கோபுரத்தின் நுழைவுவாயில் பகுதியில் காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் என வண்ண மலா்களால் எழுத்துக்கள் கோா்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூா்,ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 1000க்கும் மேற்பட்ட போலீஸாா் எஸ்.பி கே.சண்முகம் தலைமையிலும், டிஎஸ்பி. சங்கா் கணேஷ் முன்னிலையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

Story image

பக்தா்கள் ராஜகோபுரத்திலிருந்தே ஆலயத்தின் உள்பகுதிகளை பாா்வையிட வரிசையாக வருவதற்கான தடுப்புகளை காவல்துறையினா் அமைத்துள்ளனா். பொதுமக்கள் வரிசையாக வந்து யாகசாலை மண்டபத்தை சுற்றி வந்து பாா்வையிட்டனா்.

தமிழகம் முழுவதுமிருந்து 40க்கும் மேற்பட்ட ஓதுவாமூா்த்திகள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள்,அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனா்.