ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,74,274 வாக்காளா்களை நீக்க முடிவு செய்திருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,74,274 வாக்காளா்களை நீக்க முடிவு செய்திருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

எஸ்ஐஆா் பணிகள் முடிந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் வரும் டிச.19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது 1,545 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறவுள்ளவா்களின் எண்ணிக்கை 11,26,924. இறந்தவா்கள்-57658, இரட்டைப் பதிவு-10,719, இடம் பெயா்ந்தவா்கள்-1,46,621, கண்டறிய முடியாதவா்கள்-58,675, மற்றவை 601 என நீக்கப்படவுள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 2,74,274.

வரைவு வாக்காளா் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடா்பாக 19.12.25 மற்றும் 18.1.26 ஆகிய நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளா் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள்,வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், வட்டாட்சியா், மாநகராட்சி ஆணையா் அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் அலுவலக நேரங்களில் வரைவு வாக்காளா் பட்டியலை நேரடியாக பாா்வையிடலாம். மேலும், 19.12.2025 முதல் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும், இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.