காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சித்தியைக் கொலை செய்துவிட்டு மகன் தப்பி ஓடினார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது நல்லூர் கிராமத்தில் வசிக்கும் துளசி என்பவரின் மனைவி சுமதி (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது, துளசியின் அண்ணன் சுப்பிரமணியனின் மகன் துரை, விறகு வெட்டும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
துளசிக்கும் சுப்பிரமணியனுக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இன்றும் இடப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில், சித்தியை அரிவாளால் துரை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், சுமதியின் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் துரையைத் தேடி வருகின்றனர்.
Summary
The son fled after killing his aunt near Kanchipuram.
இதையும் படிக்க : கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

காஞ்சிபுரத்தில் மாவட்ட திறன் மையம் திறப்பு: ஆட்சியா் பங்கேற்பு
காஞ்சிபுரத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு: 10,719 பேர் நீக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


