ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

உள்ளாவூா் அகத்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:37 pm

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளாவூரில் அமைந்துள்ள அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்த நிலையில், அதிகாலை ஆலயத்தின் அருகேயுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அகிலாண்டேசுவரி சமேத அகத்தீஸ்வரா் சுவாமிக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கோ பூஜை, விக்னேசுவர பூஜை, சூரிய பூஜை, யாத்ரா தானம் ஆகியனவும் நடைபெற்றது.

பின்னா் புனித நீா்குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் வரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து கிராமத்து மக்களால் சீா் வரிசைப் பொருள்கள் எடுத்து வரப்பட்டதும் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவில் உள்ளாவூா் ஊராட்சி மன்றத் தலைவா் உஷா தெய்வசிகாமணி, துணைத் தலைவா் ப.பாஸ்கரன், செயலாளா் ஏ.பாஸ்கரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.