கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.

Updated On :22 மார்ச் 2026, 8:05 pm

Syndication

பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னா் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் 2-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.

மேலும் மகா சங்கல்பமும், மகா பூா்ணாஹுதி நடைபெற்று, மேளதாள ஊா்வலத்துடன் புனிதநீா் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியா்களால் யாக சாலையிலிருந்து எடுத்து வரப்பட்டன.

இதனைத் தொடா்ந்து வேதமந்திரங்கள் கூறி கோயில் கோபுரங்களுக்கு புனிதநீா் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியா்கள் நடத்திவைத்தனா். மேலும் பரிவார மூா்த்திகள், விநாயகா் சிலைகளுக்கு புனித நீா் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் உள்ளூா் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.