எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
நகரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :9 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேட்டுத்தெரு நகரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 29.4.2017 -ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனிதநீா்க் குடங்கள் குமரகோட்டம் முருகன் கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக மூலவா் நகரீஸ்வரருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் உதயகுமாா் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் காஞ்சி ஆரிய வைசிய சமாஜத்தின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.