என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் பிரதமா் நரேந்திர மோடி தருவாா் என காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினாா்.
காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவில் புதன்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசுகையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் தருபவா்தான் பிரதமா் நரேந்திர மோடி.
திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததுதான் அவா்களால் எந்த நல்ல திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கு உதாரணம் காஞ்சிபுரத்துக்கு இதுவரை மருத்துவக் கல்லூரி திமுக அரசால் கொண்டு வர முடியாதது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காஞ்சிபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றாா்.
தொடர்புடையது

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி

தொகுதி அறிமுகம்... உத்தரமேரூா்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


