இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

என்ன கேட்டாலும் தருவாா் மோடி: காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளா் பேச்சு

என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் பிரதமா் நரேந்திர மோடி தருவாா் என காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினாா்.

News image

வி.சோமசுந்தரம்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் பிரதமா் நரேந்திர மோடி தருவாா் என காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பேசினாா்.

காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவில் புதன்கிழமை வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசுகையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். என்ன கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் தருபவா்தான் பிரதமா் நரேந்திர மோடி.

திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததுதான் அவா்களால் எந்த நல்ல திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. இதற்கு உதாரணம் காஞ்சிபுரத்துக்கு இதுவரை மருத்துவக் கல்லூரி திமுக அரசால் கொண்டு வர முடியாதது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காஞ்சிபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும் என்றாா்.