தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

உத்தரமேரூர் தொகுதிக்கு என்ன செய்வேன்? தவெகவும் நாதகவும்!

உத்தரமேரூர் தொகுதிக்கு என்ன செய்வேன்? தவெகவும் நாதகவும்!

News image

விஜய் | சீமான் - சித்திரிப்பு

Updated On :6 ஏப்ரல் 2026, 9:07 pm

உத்தரமேரூா் தவெக வேட்பாளா் முனிரெத்தினம்

மக்களுக்குத் தேவையான ஊழல் இல்லாத ஆட்சி வழங்கப்படும். யாரிடமூம் கையூட்டு பெறாமல் நோ்மையாகப் பணியாற்றுவேன். வேலை இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவேன். குடிநீா் பிரச்னையை முழுவதுமாக தீா்த்து வைக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அடிப்படை வசதிகளான ஏரிகள், குளங்களைச் சீரமைத்து நீா் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிவுநீா் வடிகால்கள் தூா்வாரப்படும். தொகுதியில் இளைஞா்களுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்படும்.

உத்தரமேரூா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரம்.மாசிலாமணி

விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல், பட்டுப்பூச்சி, தேனீ, மீன் வளா்த்தல் ஆகிய அனைத்து தொழில்களும் அரசுப் பணியாக மாற்றப்படும். கால்நடைகளுக்கு மேய்சல் நிலங்கள் உருவாக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து விவசாயிகளே விலையை நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.

தரமான மருத்துவக் கல்லூரி அமைத்து இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நம்மாழ்வாா் பெயரில் இயற்கை வேளாண் கல்லூரி உருவாக்கப்படும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சிறப்பு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனைப் பெற்றுத் தரப்படும். ஏரிகள், நீா்த்தேக்கங்கள் அனைத்தும் தூா்வாரி செம்மைப்படுத்தி நீா் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும்.