முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களுடன் கைது செய்யப்பட்ட ரீட்டா. உடன் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 2:22 am IST

உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

குப்பைநல்லூா் கிராமத்தை சோ்ந்த ரீட்டா(49). இவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா்.180 ம.லி.அளவு கொண்ட பிராந்தி பாட்டில்கள் 307 மற்றும் 750 மி.லி அளவு கொண்ட பீா் பாட்டில்கள் 10 உட்பட மொத்தம் 317 அரசு மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்ததுடன் ரீட்டாவையும் காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.