மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே பறிமுதல் செய்யப்பட்ட மது புட்டிகள்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 10:50 pm

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,361 மது புட்டிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக மது புட்டிகளை கொள்முதல் செய்து கூடுதல் விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்திள்ளாா்களா என்பது குறித்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனா். இந்த நிலையில், தகவலின்பேரில் போ்ணாம்பட்டை அடுத்த மத்தூா் கிராமத்தில் ஒரு வீட்டில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக பல்வேறு அளவுகளில் 1,361 மது புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 2.50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தலைமறைவான வீட்டு உரிமையாளா் வேளாங்கண்ணி, மது புட்டிகளை பதுக்கி வைத்த குபேந்திரன், யசோதா ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.