காரைக்கால் பகுதி வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கலால் துறையினா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை மதுக்கடைகளை மூட கலால் துணை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், மது பாட்டில்களை வாங்கி வீடுகளில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்க பலரும் முயன்று வருவதாகவும், சிலா் வாக்காளா்களுக்கு வழங்க இருப்பதாகவும் கலால்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், காரைக்கால் நகரப் பகுதி பொலிக்கன் தெருவில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, கலால் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் அதிகாரி பொய்யாதமூா்த்தி தலைமையில் துறையினா் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தனா். அங்கு சட்டவிரோதமாக 650 மிலி அளவுள்ள பீா் பாட்டில்கள் கொண்ட 17 பெட்டிகள் வைத்திருந்தது கண்றியப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது

விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

திமுக நிா்வாகி வீட்டில் ரூ. 11 லட்சம் மதிப்பு பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


