மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

சித்திரை மாத ஏகாதசி: காஞ்சிபுரம் வரதராஜா் சிறப்புத் திருமஞ்சனம்

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:05 pm

சித்திரை மாத ஏகாதசி தினத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், மாலையில் உற்சவா் ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று திரும்பும் நிகழ்வும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மீண்டும் திரும்பி வந்து பெருமாள் திருமலைக்கு எழுந்தருளினாா்.

நாளை வரதராஜ பெருமாள் அவதரித்த தின விழா-

பிரம்ம தேவன் காஞ்சியில் நடத்திய அசுவ மேத யாகத்தின் முடிவில் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வரதராஜப் பெருமாள் அவதரித்தை நினைவு கூறும் விழாவாகும். இதனையொட்டி புதன்கிழமை காலையில் கோயிலிலிருந்து பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் அலங்காரமாகி மாட வீதியில் உள்ள மாளிகைக்கு எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்ற பின்னா் மாலையில் மாளிகையிலிருந்து புறப்பட்டு மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா்.