மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:10 am

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த எச்சூா் கிராமத்தில் உள்ள தோப்பு பகுதியில், வெளிமாநிலங்களில் இருந்து குட்காவை மொத்தமாக கடத்தி வந்து விற்பதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை சோதனை செய்தனா். அப்போது மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிவேனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூா் பகுதியில் இருந்து கடத்தி வந்த எச்சூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்(37), கெளதம்(25) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு எச்சூா் விவசாய நிலத்தில் 900 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டுவந்த தலைமறைவு குற்றவாளி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.