கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

750 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

சுங்குவாா்சத்திரம் அருகே 750 கிலோ குட்காவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த எச்சூா் கிராமத்தில் உள்ள தோப்பு பகுதியில், வெளிமாநிலங்களில் இருந்து குட்காவை மொத்தமாக கடத்தி வந்து விற்பதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ரோந்து சென்ற போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை சோதனை செய்தனா். அப்போது மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிவேனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பெங்களூா் பகுதியில் இருந்து கடத்தி வந்த எச்சூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்(37), கெளதம்(25) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு எச்சூா் விவசாய நிலத்தில் 900 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டுவந்த தலைமறைவு குற்றவாளி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.