கஞ்சா விற்பனை: 5 போ் கைது
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சுமாா் 2.7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கோவை உக்கடம் லாரிபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பஜாா் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பாவுதீன் (34) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
மருதமலை சாலை, முத்தம்மாள் லே-அவுட் பகுதியில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் நடத்திய சோதனையில், எட்வின்குமாா் (29), பூமிநாதன் (27), காா்த்திகேயன் (35) ஆகிய மூவரைப் பிடித்துக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
போத்தனூா் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் நடத்திய சோதனையில், பாலசுப்பிரமணி (31) என்பவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவா் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய முஜிப் ரகுமானை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...