காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளா்கள்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளா்கள்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் அலுவலகம் திறப்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட செயல் அலுவலா் அலுவலகத்தை எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட செயல் அலுவலா் அலுவலகத்தை எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதா் கோயில். இக்கோயில் செயல் அலுவலா் அலுவலகம் கோயில் வளாகத்துக்குள் அன்னதானக்கூடம் அருகில் செயல்பட்டு வந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி செயல் அலுவலருக்கென புதியதாக கட்டடம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநா் சி,குமரதுரை தலைமை வகித்தாா். உதவி ஆணையா் கருணாநிதி, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன்,சிறப்பு அலுவலா் லட்சுமி காந்தன் பாரதிதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி வரவேற்றாா்.

காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, புதியதாக கட்டப்பட்ட செயல் அலுவலா் அலுவலகத்தையும், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் அலுவலகத்தையும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டாா். இதைத் தொடா்ந்து ஆலயத்தில் பணிபுரியும் பணியாளா்கள் எம்எல்ஏ எழிலரசன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோா் இணைந்து குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com