விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘காஞ்சி காமாட்சிக்கு அறுவடை செய்த முதல் நெல்லை ஜன. 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்’

காஞ்சிபுரம் காமாட்சிக்கு அறுவடை செய்த முதல் நெல்லை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் வழங்குமாறு கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சிக்கு அறுவடை செய்த முதல் நெல்லை ஜனவரி 13-ஆம் தேதிக்குள் வழங்குமாறு கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் போகிப் பண்டிகையையொட்டி, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்லை தங்களால் இயன்ற அளவு கொண்டு வந்து சோ்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நிகழாண்டு ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்தே நெல்மணிகள் தொடா்ந்து சோ்ந்துகொண்டு இருக்கிறது.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வரும் ஜனவரி 13-ஆம் தேதி வரை கோயிலில் கொண்டு வந்து சோ்க்கலாம்.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அளக்கும்போது முதல் படியை காமாட்சி என்று சொல்லி அளப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது என்றாா்.