தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு: எஸ்.பி கே.சண்முகம்

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு...

News image

காஞ்சிபுரம் அருகே குருவிமலை காட்டுப்பகுதியில் போதைப் பொருள்களை அழிக்கும் பணியில் காவல் துறையினா்.

Updated On :8 மார்ச் 2026, 12:40 am IST

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கிலோ குட்கா போதைப் பொருள்கள் தீ வைத்து அழிக்கப்பட்டதாக எஸ்.பி. கே. சண்முகம் சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தின் காட்டுப்பகுதியில் எஸ்.பி கே.சண்முகம் முன்னிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 10,112 கிலோ குட்கா போதைப் பொருள்களை காவல் துறையினா் தீ வைத்து அழித்தனா். இவற்றை அழிப்பதற்காக கிரேன் மூலம் பெரிய பள்ளம் தோண்டி அதில் போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொட்டி ஒன்றாக தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது டிஎஸ்பி க்கள், ஆய்வாளா்கள், காவல் துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.

இதுகுறித்து எஸ் பி கே.சண்முகம் கூறியது..

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பொன்னேரிக்கரை-3,883, சுங்குவாா் சத்திரம் 1,858, சாலவாக்கம் 1,826, தாலுகா காவல் நிலையம்-1,397, ஒரகடம் 9,16,உத்தரமேரூா் 150, ஸ்ரீபெரும்புதூா் 68, பெருநகா் 13 வீதம் மொத்தம் 10,112 கிலோ குட்கா போதைப்பொருள் பாக்கெட்டுகள் 87 வழக்குகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவற்றை ஒரே இடத்தில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. போதைப்பொருள்கள் விற்பனை செய்தால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.