ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 320 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை அழித்தனா்.
ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூா்பேட்டை பேரூராட்சி கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் தியான் உத்தரவின் பேரில் ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு போலீஸாா் கடைகளில் சோதனை மேற்கொண்டு குட்கா மற்றும் பான் மசாலா பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதையெடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பள்ளிப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை ஆா்.கே.பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திக், பள்ளிப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் குமாா், பொதட்டூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி துா்கா தேவி மற்றும் பள்ளிப்பட்டு நீதிமன்ற தலைமை எழுத்தா் ஐயப்பன் மற்றும் அலுவலா்கள் பேரூராட்சி அலுவலா்கள் ஆகியோா் முன்னிலையில் கொட்டி அழித்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.36.17 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


