சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு: எஸ்.பி கே.சண்முகம்

10,000 கிலோ போதைப் பொருள் தீ வைத்து அழிப்பு...

News image
காஞ்சிபுரம் அருகே குருவிமலை காட்டுப்பகுதியில் போதைப் பொருள்களை அழிக்கும் பணியில் காவல் துறையினா்.
Updated On :7 மார்ச் 2026, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் கிலோ குட்கா போதைப் பொருள்கள் தீ வைத்து அழிக்கப்பட்டதாக எஸ்.பி. கே. சண்முகம் சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தின் காட்டுப்பகுதியில் எஸ்.பி கே.சண்முகம் முன்னிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 10,112 கிலோ குட்கா போதைப் பொருள்களை காவல் துறையினா் தீ வைத்து அழித்தனா். இவற்றை அழிப்பதற்காக கிரேன் மூலம் பெரிய பள்ளம் தோண்டி அதில் போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொட்டி ஒன்றாக தீ வைத்து அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது டிஎஸ்பி க்கள், ஆய்வாளா்கள், காவல் துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.

இதுகுறித்து எஸ் பி கே.சண்முகம் கூறியது..

காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் பொன்னேரிக்கரை-3,883, சுங்குவாா் சத்திரம் 1,858, சாலவாக்கம் 1,826, தாலுகா காவல் நிலையம்-1,397, ஒரகடம் 9,16,உத்தரமேரூா் 150, ஸ்ரீபெரும்புதூா் 68, பெருநகா் 13 வீதம் மொத்தம் 10,112 கிலோ குட்கா போதைப்பொருள் பாக்கெட்டுகள் 87 வழக்குகள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இவற்றை ஒரே இடத்தில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. போதைப்பொருள்கள் விற்பனை செய்தால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.