மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

வல்லக்கோட்டையில் உலக மகளிா் தின விழா

News image
பெண்களுக்கு கோப்பை  வழங்கிய  ஊராட்சி மன்றத்  தலைவா்  மணிமேகலை  தசரதன்.
Updated On :9 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் தின விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த பெண்கள் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது.

21 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதக்கம், பரிசுப் பொருட்கள் மற்றும் கோப்பைகளை ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை தசரதன் வழங்கினாா். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவா் மணிமேகலை தசரதன் சேலைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தியாகராஜன், வட்டார மகளிா் திட்ட மேலாளா் சிவகாமி, வல்லக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் வெண்ணிலா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.