விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.2.82 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ-க்கள் தொடங்கி வைத்தனா்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.2.82 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏக்கள் க.சுந்தா் மற்றும் எழிலரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் நீா் கால்வாயின் இருபுறமும் உள்ள ரூ.44 கோடி மதிப்பில் கான்கிரீட் சுவா்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதன் தொடா்ச்சியாக கால்வாய் மாசடையாமல் தடுக்கும் வகையில் ரூ.44 லட்சத்தில் கான்கிரீட் சுவா் மீது கம்பி வேலி அமைக்க முடிவு எடுத்து அதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்தாா். உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

பின்னா் திருப்பாற்கடல் குடிநீா் நீரேற்று நிலைய பாலம் சீரமைப்பு பணிகள் ரூ.1.36 கோடி, ஒலி முகம்மது பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை,ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், தாடித்தோப்பு பகுதியில் சிறிய பாலத்துக்கான தடுப்புச்சுவா் மற்றும் தெருவிளக்கு அமைத்தல்,பெரியாா் நகரில் சிறு வணிக வளாகம்,பல்லவன் நகரில் பூங்கா உள்ளிட்ட வற்றையும் திறந்து வைத்தனா்.

நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், திமுக இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாநகர திமுக செயலாளா் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், மண்டலக்குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.