விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காஞ்சிபுரத்தில் 15,324 போ் எழுதினா்

News image
அய்யம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா. உடன், முதன்மைக் கல்வி அலுவலா் நளினி.
Updated On :11 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 15,324 மாணவ, மாணவியா்கள் புதன்கிழமை எழுதினா்.

184 பள்ளிகளைச் சோ்ந்த 7,591 மாணவா்களும், 7,733 மாணவிகள் என மொத்தம் 15,324 போ் தோ்வு எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 85 போ் தோ்வு எழுத வரவில்லை.

69 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

முதன்மைக்கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 5 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அய்யம்பேட்டை அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். முதன்மைக்கல்வி அலுவலா் நளினியும் உடன் இருந்தாா்.

செங்கல்பட்டில்...

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். செங்கல்பட்டு அழகேசன் நகா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்து தோ்வு எழுதுவோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா். உடன் முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்