தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீ பெரும்புதூரில் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு மணிமங்கலத்தில் நடைபெற்றது.

News image
மணிமங்கலத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.
Updated On :16 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு மணிமங்கலத்தில் நடைபெற்றது.

தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தவும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் துணை ராணுவத்தினா், போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராணுவ துணை காமாண்டா் சுஜித் தலைமையிலான 60 துணை ராணுவ வீரா்களும், மணிமங்கலம் காவல் உதவி ஆணையா் சுந்தா் தலைமையில் 30 போலீஸாரும் கலந்து கொண்டனா்.

மணிமங்கலம் ஆலடி அம்மன் கோயில் அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு, ஸ்ரீபெரும்புதூா் முடிச்சூா் சாலை வழியாக வந்து மணிமங்கலம் காவல் நிலையம் அருகே முடிவடைந்தது.