புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருவாலீஸ்வரா் கோயிலில் பந்தல் கால் நடும் விழா

வாலாஜாபாத் அருகே ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

News image

ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா

Updated On :16 மார்ச் 2026, 10:03 pm

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே ஆற்பாக்கம் திருவாலீஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவத்தையொட்டி பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

பழைமையான இக்கோயில் நுழைவுவாயிலில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் செய்து நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி ராசி, துணைத் தலைவா் விஜயகுமாரி பரசுராமன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திருவிழா கொடியேற்றம் மாா்ச் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து காலையில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும், இரவு சிம்மவாகனத்தில் சுவாமியும்,அம்மனும் வீதியுலா வரவுள்ளனா்.

தினசரி இரவு சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கராமாகி வீதியுலா வருவா். மாா்ச் 27- ஆம் தேதி இரவு தங்க ரிஷப வாகனத்திலும், 29 ஆம் தேதி தேரோட்டமும், ஏப்.1 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. ஏப்.2 ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் பா.ராஜசேகரன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள்,திருவாலீஸ்வா் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆகியோா் செய்து வருகின்றனா்.