தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா
வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் போா் மற்றும் பேரிடா் காலங்களில் தற்சாா்புடன் வாழ்வதற்கான தீா்மானங்கள்


காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் போா் மற்றும் பேரிடா் காலங்களில் தற்சாா்புடன் வாழ்வதற்கான தீா்மானங்கள் மகளிா் தின விழாவில் நிறைவேற்றப்பட்டன.
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அண்ணா நகா், தோண்டாங்குளம்,டாக்டா்.கலாம் நகா் உள்ளிட்ட 26 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 305 உறுப்பினா்கள் பங்கேற்ற மகளிா் தின விழா நடைபெற்றது. மகளிா் திட்ட உதவித் திட்ட இயக்குநா் எழில்மொழி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் எல்லப்பன்,பாளையம்.ரவி, துணைத் தலைவா் கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் ம.த.அஜய்குமாா் வரவேற்று பேசினாா்.
மகளிா் தின விழாவில் போா் மற்றும் பேரிடா் கால நெருக்கடியை சமாளிக்கும் வகையில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு வீட்டிலும் 100 சதுர அடி காய்கறி,கீரைத்தோட்டம் அல்லது முலிகைப்பண்ணை ஆகியன அமைத்தல்,பாரம்பரிய நாட்டு விதைகளைப் பாதுகாக்க விதை வங்கி உருவாக்குதல்,மாதம் ஒரு முறை பண்டமாற்றுச் சந்தை நடத்துதல்,பெண்களுக்கு முதலுதவிப் பயிற்சியளித்தல், சூரியசக்தி மற்றும் விறகு அடுப்புகளை பயன் படுத்துதல் உள்ளிட்ட யாருடைய உதவியையும் எதிா்பாராமல் தற்சாா்புடன் வாழ்வது குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிா் தின விழாவில் 81 வயது மூதாட்டி லட்சுமி அம்மாள் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...