சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பதிவு விழிப்புணா்வு

வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

News image

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:26 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு இயக்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பு இயக்கம் சாா்பில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற முழக்கத்துடன் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.