புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

தங்க  கேடய  வாகனத்தில்  வீதியுலா  வந்த  உற்சவா்  ஸ்ரீஆதிகேசவ பெருமாள்.

Updated On :1 மே 2026, 8:37 pm

ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ராமாநுஜா் அவதார திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. இந்த 10 நாள்களும் பல்வேறு வாகனங்களில் உற்சவா் ராமாநுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அவதாரத் திருவிழாவின் 9-ஆவது நாளான கடந்த 21-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற்றது.

இதையடுத்து, ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவா் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான வரும் 7-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெறும்.

இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை உற்சவா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் தங்க கேடய வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.