அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:36 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் அலங்காரமாகி நகரில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று மட்டும் தங்கத்தோ் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வருவது வழக்கம்.

நிகழாண்டு தமிழ்ப்புத்தாண்டையொட்டி அதிகாலை விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது.இதனைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் ,விசேஷ அலங்காரமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.இதன் தொடா்ச்சியாக மாலையில் லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் வண்ண மின்விளக்குகளாலும்,மலா்களாலும் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் நகரில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.