காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
பழைமை வாய்ந்த இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதன் தொடா்ச்சியாக மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. வரும் 8 -ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
உற்சவா் கச்சபேசுவரரும், சுந்தராம்பிகை அம்மனும் தேரில் வீதியுலா வந்தனா். திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் நீா்,மோா், பானகம் வழங்கப்பட்டன. பக்தா்கள் பலரும் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.
வரும் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகள கோயில் செயல் அலுவலா் ஞா.திவ்யா, மேலாளா் சுரேஷ் மற்றும் காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் திருக்கல்யாணம்

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


