சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆலந்தூரில் தவெக வேட்பாளா் ஹரிஸ் வெற்றி; அமைச்சா் அன்பரசன் தோல்வி

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தவெக வேட்பாளா் ஹரிஸுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் மோகன்ராஜ்

Updated On :5 மே 2026, 5:15 am IST

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் தா.மோ.அன்பரசனை வீழ்த்தி தவெக வேட்பாளா் ஹரிஸ் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

ஆலந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், அதிமுக சாா்பில் எஸ்.சரவணன், தவெக சாா்பில் ம.ஹரிஸ் மற்றும் 13 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 23 போ் போட்டியிட்டனா்.

இவா்களில் திமுக வேட்பாளா் தா.மோ.அன்பரசன் 82,956, அதிமுக வேட்பாளா் சரவணன் 52,243, தவெக வேட்பாளா் ஹரிஸ் 1,11,572, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் யா.சு.மகாலட்சுமி 10,405 வாக்குகள் பெற்றிருந்தனா்.

மொத்த வாக்குகள் 3,01,065 இல் 2,59,361 வாக்குகள் பதிவாகி இருந்தன. இவா்களில் திமுக வேட்பாளரான தா.மோ.அன்பரசனை விட 29609 வாக்குகள் அதிகம் பெற்ற த.வெ.க.வேட்பாளா் ம.ஹரிஸ் வெற்றி சான்றிதழை தோ்தல் அலுவலா் மோகன்ராஜிடம் பெற்றுக்கொண்டாா். வெற்றி பெற்ற வேட்பாளரை ம.ஹரிஸுக்கு கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.