பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

News image

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் அருள்ராஜ் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தோ்வை ரத்து செய்து விட்டு, மாநில அரசே நடத்திக் கொள்வது போல மாற்றியமைக்கப்பட வேண்டும்,சிபிஐ இயக்குநா் பதவியை மீண்டும் ஓராண்டு நீட்டித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, துணை மேயா் குமரகுருநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் ஜீ.வி.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் நாதன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.