ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 22 -ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நடத்தப்படும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மே 22 -ஆம் தேதி காஞ்சிபுரத்திலும், 26-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரிலும் நடத்தப்படும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதந் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்று வந்தது. இம்மாதத்துக்கான கூட்டத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்தது..

வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெறும். ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் தலைமையில் அவரது அலுவலக கூட்ட அரங்கில் வரும் மே 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கும் நடைபெறவுள்ளது. எனவே விவசாய சங்கப் பிரதிநிதிகள் வருவாய் கோட்டங்கள் அளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

பாரதப்பிரதமரின் கெளரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகியனவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி வரும் மே 31-ஆம் தேதிக்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறும் ஆட்சியா் தி.சினேகா கேட்டுக் கொண்டாா்.