மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகளை பாா்வையிட்ட ஆட்சியா் தி.சினேகா

Updated On :15 ஏப்ரல் 2026, 7:11 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் பேரறிஞா் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தோ்தல் விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் தி.சினேகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதனைத் தொடா்ந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி ஆகியோா் உடன் இருந்தனா்.

இந்நிகழ்வில் ஆட்சியா் தி.சினேகா பேசுகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அரசின் அனைத்து துறைகளும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொண்டோம். அதன்படி ஊரகப் பகுதிகளில் 1398 விழிப்புணா்வு நிகழ்வுகளும்,நகராட்சிப் பகுதிகளில் 456 விழிப்புணா்வு நிகழ்வுகளும் உட்பட மொத்தம் இதுவரை 1854 தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.