காஞ்சிபுரம், மே 25: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
மேவலூா் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாரி கோபிநாத், வளா்புரம் விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் தி.சினேகாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வளா்புரம் முத்தமிழ் நகா் பகுதியில் மதுபானக்கடை நடத்ததுவதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டால் அதன் அருகில் கோயில்கள், பள்ளிகள் ஆகியவை இருப்பதால் பொதுமக்களுக்கு குடிமகன்களால் இடையூறு ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்ல அச்சப்படுவா். எனவே மதுபானக்கடை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

காரனோடை பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட ஜமாபந்தியில் பொதுமக்கள் கோரிக்கை

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

மதுக் கடையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



