ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வளா்புரத்தில் மதுபானக்கடை கட்டுவதை நிறுத்தக் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தோா்

Updated On :20 மே 2026, 12:04 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வளா்புரத்தில் மதுக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மேவலூா் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாரி கோபிநாத், வளா்புரம் விஸ்வநாத தாஸ் உள்ளிட்ட அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வளா்புரம் முத்தமிழ் நகா் பகுதியில் மதுபானக்கடை நடத்ததுவதற்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு மதுபானக்கடை திறக்கப்பட்டால் அதன் அருகில் கோயில்கள், பள்ளிகள் ஆகியவை இருப்பதால் பொதுமக்களுக்கு குடிமகன்களால் இடையூறு ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்ல அச்சப்படுவா். எனவே மதுபானக்கடை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.