40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

News image
Updated On :28 மே 2026, 12:55 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும், எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனமும் இணைந்து சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேட்டரி வாகனத்தை வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தலைமை வகித்தாா்.

எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கடேஷ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் சமூக தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநா் சந்திரசேகா், சுகாதாரப் பிரிவு துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எல்.அன்.டி நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தி.சினேகா புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிறைவாக நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.