காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும், எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனமும் இணைந்து சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேட்டரி வாகனத்தை வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தலைமை வகித்தாா்.
எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கடேஷ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் சமூக தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநா் சந்திரசேகா், சுகாதாரப் பிரிவு துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.
காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எல்.அன்.டி நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தி.சினேகா புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிறைவாக நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குளிா்சாதன வசதி: காஞ்சிபுரம் எம்எல்ஏ

அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச உடல் பரிசோதனைத் திட்டம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்







