இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ஆம்புலன்ஸ்: ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

News image
Updated On :28 மே 2026, 12:55 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனமும், எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனமும் இணைந்து சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பிலான அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் பேட்டரி வாகனத்தை வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தலைமை வகித்தாா்.

எல் அன் டி வால்வ்ஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கடேஷ், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் சமூக தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பிரிவு இயக்குநா் சந்திரசேகா், சுகாதாரப் பிரிவு துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் எல்.அன்.டி நிறுவனம் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பின் நிா்வாகிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தி.சினேகா புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிறைவாக நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.