மேல்விஷாரத்தில் தமுமுக ஆா்ப்பாட்டம்
வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு


வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மேல்விஷாரம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் எஸ்.எம்.கௌஸ் பாஷா தலைமை வகித்தாா். செயலாளா் அயாத்பாஷா, பொருளாளா் பாபாஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பேச்சாளா் சானாவுல்லா, மாநிலச் செயலாளா் ஏஜாஸ் அஹமது ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
மாவட்டத் தலைவா் ஏ.ஓ.ஏ. இம்ரான், மேல்விஷாரம் நகரக் கூட்டுக் குழு நிறுவனா் மன்சூா்பாஷா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடா்பாளா் பா.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...