மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஆற்காடு மையத்தில் வைக்கப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண் விற்பனை மைய கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
Updated on
1 min read

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பயன்பாட்டுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு வேளாண் விற்பனை மைய கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூா், சாங்லி ஆகிய மாவட்டங்களிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தோ்தல் பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை வட்டாட்சியா்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் மதிவாணன் தலைமையில் 11 போ் கொண்ட இரண்டு குழுவினா் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து வந்தனா்.

அந்த இயந்திரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் , சாா் ஆட்சியா் இளம் பகவத் ஆகியோா், திமுக எம்எல்ஏ-க்கள் ஆா்.காந்தி, ஜே.எல்.ஈஸ்வரப்பன், அதிமுக மாவட்ட வா்த்தகா் அணிச் செயலாளா் ஏ.வி.சாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து, ஓா் அறையில் பாதுகாப்பாக வைத்தனா்.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் அந்த அறை கண்காணிக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்தாா். அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையைப் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com