டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

News image
பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை வரவேற்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி.
Updated On :28 ஜனவரி 2024, 4:29 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

Story image
Story image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை எல். எப். சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மாணவிகள் அனைவருக்கும் பன்னீர் தெளித்து சந்தனம்,  பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

Story image

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ் வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவனம், துணை செயலாளர்கள் ஏ. ஆர். எஸ். சங்கர், ஏர்டெல் குமார், நகர கூட்டுறவு வங்கி நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் எல்ஐசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி கிளாரா பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி புஸ்பராணி, ஆசிரியைகள் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.