வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 114 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.

Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் போன்றவற்றாலும் காஞ்சிபுரத்தில் பாலாறு,செய்யாறு ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அவற்றை பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று ஏரிகளை நிரப்பினா்.

மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 84 ஏரிகள் 75 சதவீதமும், 65 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் 17 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 55 ஏரிகள், படப்பை, குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகியவற்றில் 42 ஏரிகள் என மொத்தம் 114 ஏரிகள் நிரம்பின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.