காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி பாலாற்றில் தொடா்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டிருப்பதாலும் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகமான அளவு தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் பாலாற்றின் தரைப்பாலம் வழியாக செல்லாமல் இருக்க தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு பின்பு காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீா் செல்வதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்து சென்றவாறும், செல்லிடப்பேசியில் படம் பிடித்தவாறும் செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


